என்னை முன்னாள் மனைவி என அடையாளப்படுத்த வேண்டாம்.. அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி ரவி..!
ரவி மோகன் குறித்த அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார் மனைவி ஆர்த்தி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் சில மாதங்களுக்கு முன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் ஆனால் அவரது மனைவிக்கு இதில் விருப்பமில்லாததால் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு தனது தோழி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் ஜோடியாக திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவிமோகன் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் என் மௌனத்தை கலைக்கிறேன் என் குழந்தைகளுக்காக.. என்று ஆரம்பித்து,கடந்த ஒரு வருடமாக மௌனத்தை ஒரு விரதமாகவே மேற்கொண்டு வருகிறேன் பல மாதங்களாக குழந்தைகளின் பொறுப்பை என் தோள்களில் மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன் யாரும் அறியாமல் அந்த குழந்தைகள் சிந்தும் கண்ணீரையும் என் கைகள் தான் துடைக்கிறது என்று புதியதாக முளைத்தவர்களுடன் புதியதொரு உறவை உருவாக்கிக் கொண்டதால் பழைய உறவு இப்பொழுது வெறும் செங்கல் சுவர் போல அவர் கண்களுக்கு காட்சியளிக்கிறது. என் குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொடுப்பேன் என்ற அவரது வாக்குறுதி பறந்து விட்டது.
இன்றும் என்னைத்தான் பணத்தாசை பிடித்தவள் போல சித்தரிக்கிறார்கள். இன்று நீங்கள் உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளலாம் உங்கள் பெயரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம் ஆனால் உண்மையை மாற்ற முடியாது அப்பா என்பது உறவு மட்டுமல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு இன்றும் எனது இன்ஸ்டாகிராம் ஐடி ஆர்த்தி ரவி என்ற பெயரில் தான் உள்ளது சட்டம் முடிவு செய்யும் வரை அது அப்பெயரிலேயே நீடிக்கும் அன்புள்ள ஊடகவியாளர்களுக்கு என்னை நீங்கள் அவரது முன்னாள் மனைவி என்று அடையாளப்படுத்த வேண்டாம் அந்த முடிவை சட்டம் எடுக்கும் வரை அமைதி காப்போம் பழிவாங்கவோ பரபரப்புக்காகவோ நான் பேசவில்லை என் குழந்தைகளின் நலனுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் போராடுகிறேன். இன்றும் உங்களை அப்பா என்று அழைக்கும் அந்த இரு மகன்களுக்காக என் கண்ணீரை கதறல்களை கசப்பான அனுபவங்களை மறைத்துக் கொண்டு மேலும் மேலும் உயர்ந்து எழுகிறேன்.
என்று எமோஷனலாக அந்த அறிக்கையில் பேசியுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram