கேட்காமலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சங்கத்திற்கு உதவி உள்ளார்.
Rajinikanth Contribution to Directors Association : கோவிட் 19 என்ற கொரானா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கி இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. சினிமாத் துறையிலும் படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறாமல் படங்கள் ரிலீசாகாமல் இருந்து வருகின்றன.
சிவாஜிக்கு பிறகு சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே கிடைத்த பெருமை – புகைப்படத்துடன் இதோ!
இந்த நிலையில் சினிமா தொழிலாளர்கள் கொண்ட அமைப்பான பெப்சி நிறுவனத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதி அளித்திருந்த ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சங்கத்திற்கு உதவியுள்ளார்.
ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை ரஜினிகாந்த் வழங்கி அவர்களுக்கு உதவியுள்ளார்.
இதனை அடுத்து இயக்குனர் சங்கம் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.