அசோக் செல்வன் நடிப்பில் வெளியான நித்தம் ஒரு வானம் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அசோக் செல்வன். மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் நித்தம் ஒரு வானம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா மற்றும் சிவாத்மிகா நடித்துள்ளனர். மேலும் படத்தில் மருத்துவராக விருமாண்டி அபிராமி நடித்துள்ளார்.
இந்த படத்தை ரா. கார்த்திக் என்பவர் இயக்க கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
படத்தைப் பற்றிய கதைக்களம் :
அப்பா அம்மா பெரிய அளவில் இணக்கம் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார் அசோக் செல்வன். புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஒரு பெண்ணை காதலிக்க திருமண ஏற்பாடுகள் நடக்க திருமணத்திற்கு முந்தைய நாள் அந்த பெண் தன்னுடைய காதல் கதை குறித்து சொல்ல அசோக் செல்வன் காதலனை தேடி போக சொல்கிறார். கல்யாணம் இன்று போன விஷயத்தை அசோக் செல்வன் மன அழுத்தத்திற்கு உள்ளாக பிறகு மருத்துவர் அபிராமி இடம் சிகிச்சைக்கு செல்கிறார்.
அவர் இரண்டு காதல் புத்தகங்களை கொடுத்து அதை படிக்க சொல்ல அந்த புத்தகத்தை படிக்கும் அசோக் செல்வன் அதில் வரும் நாயகனாக தன்னை நினைத்துக் கொள்கிறார். இரு கதையையும் நினைத்து படத்தின் கதை நகர அந்த இரண்டு காதல் கதைகளின் டைரியில் கடைசி பக்கங்கள் இல்லாமல் போக அடுத்து என்ன நடந்தது என டாக்டர் இடமே கேட்க அதை நீயே தேடிப் போ என சொல்கிறார்.
இதனால் அசோக் செல்வன் இன்னொரு நாயகி ரித்து வர்மாவுடன் இணைந்து இந்த காதல் கதையை தேடி செல்கிறார். அடுத்து அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது? மூன்று நாயகிகளில் யாரை அவர் திருமணம் செய்தார் என்பதுதான் இந்த படத்தின் கதைக்கலாம்.
படத்தை பற்றிய அலசல் :
அசோக் செல்வன் வழக்கம் போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளார்.
ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் சிவாத்மிகா என மூவரும் போட்டி போட்டு அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இயக்குனர் மாறுபட்ட காதல் கதையை தேர்வு செய்து அழகான பாதையில் கொண்டு சென்றுள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை பலம் சேர்த்திருந்தாலும் பாடல்கள் பலவீனமாக அமைந்துள்ளன.