Mudhalvan 2 Update – தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர். இவரின் ஐந்தாவது படமாக வெளியானது முதல்வன்.
ரஜினிக்காக எழுதிய கதையை சிறு மாற்றங்கள் செய்து அர்ஜுனை வைத்து இயக்கினார். ஜென்டில்மேன், இந்தியன் பாணியில் உருவான ‘முதல்வன்’, இன்றுவரை ஷங்கரின் மிகச்சிறந்த படைப்பாக பார்க்கப்படுகிறது.
அஜித் படத்துக்கு நோ சொன்ன ஷாருக்கான் – இதுவரை வெளிவராத தகவல்!
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ‘முதல்வன்’ படத்தின் திரைக்கதை, ஒரு நல்ல கமர்ஷியல் சினிமாவுக்கான சிறந்த திரைக்கதைக்கு உதாரணமாக இன்றுவரை திரைப்பட கல்லூரிகளில் மேற்கோள் காட்டப்படுகிறது.
குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் டிராபிக்ஜாம் காட்சியும், இன்டர்வியூ காட்சியும், இடைவெளிக்கு முன்பு வரும் ஒருநாள் முதல்வர் காட்சிகளும் ஒரு சீக்குவென்ஸ் எப்படி தொய்வில்லாமல் எழுதி, எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாய் அமைந்திருக்கும்.
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
இப்படிப்பட்ட படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என பலரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அர்ஜுன், “முதல்வன் இரண்டாம் பாகத்தை ஷங்கர்தான் முடிவு செய்யவேண்டும். ஆனால் அவர் இப்படத்தை எடுப்பார் என எனக்கு நம்பிக்கையில்லை” என கூறியுள்ளார்.