ரஜினியை வைத்து படம் இயக்குவீர்களா.. மாரி செல்வராஜ் சொன்ன பதில்.!!

ரஜினியை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் ,மாமன்னன் ,கர்ணன் ,வாழை, போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாரி செல்வராஜுடம் ரஜினிகாந்துடன் இணைந்து படம் எடுப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார் அதாவது ரஜினி சாருக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என் என் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் பார்த்துவிட்டு என்னை நேரில் அழைத்து பாராட்டுகிறார்.
நாங்கள் கதைகள் குறித்தும் பேசி உள்ளோம் என்னிடம் கதையும் இருக்கிறது அவற்றை சொல்லியும் இருக்கிறேன் என் மீது நம்பிக்கை வைத்து எனது நேர்மையை நம்பி அவர் வந்தால் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
