Manish Pandey Comeback :
விண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கேப்டன் மணிஷ் பாண்டே சதமடித்து கைகொடுக்க இந்தியா ‘ஏ’ அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ‘ஏ’, விண்டீஸ் ‘ஏ’ அணிகள் மோதிய அதிகாரப்பூர்வமற்ற 3வது ஒருநாள் போட்டி நார்த் சவுண்டில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இந்தியா ‘ஏ’ அணிக்கு அன்மோல்பிரீத் சிங் (0) ஏமாற்றினார்.
பொறுப்பாக ஆடிய மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் அரைசதம் கடந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 47 ரன் எடுத்து ஓரளவு கைகொடுத்தார்.
ஹனுமா விஹாரி (29), இஷான் கிஷான் (24) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய கேப்டன் மணிஷ் பாண்டே சதமடித்தார்.
இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்தது. குர்னால் பாண்ட்யா (2), வாஷிங்டன் சுந்தர் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஒரு வருடமாக தம்பியிடம் பேசாத விஜய் தேவர்கொண்டா – அதுக்கு பின்னாடி இப்படியொரு காரணமா?
அதனை தொடர்ந்து கடின இலக்கை விரட்டிய விண்டீஸ் ‘ஏ’ அணிக்கு ஜான் கேம்ப்பெல் (21), சுனில் அம்ரிஸ் (30) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது.
குர்னால் பாண்ட்யா ‘சுழலில்’ ரெய்பர் (19), கேப்டன் ராஸ்டன் சேஸ் (15), ஜோனாதன் கார்டர் (4) சிக்கினர்.
மற்றவர்கள் ஏமாற்ற விண்டீஸ் ‘ஏ’ அணி 34.2 ஓவரில், 147 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் குர்னால் பாண்ட்யா 5 விக்கெட் கைப்பற்றினார்.
இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.