ஒரு வருடமாக தம்பியிடம் பேசாமல் இருந்து வந்த விஜய் தேவரகொண்டா பேசாதற்கான காரணத்தை பொது மேடையில் கூறியுள்ளார்.

Vijay Devarakonda Speech : தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு ஒரு தம்பி உள்ளார் அவரின் பெயர் ஆனந்த் தேவரகொண்டா.

ஆனந்த் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ள தொரசானி என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 12-ம் தேதி ரிலீசாக உள்ளது.

அடுத்ததடுத்து பாலிவுட்டில் ரீமேக்காகும் அஜித்தின் 2 படங்கள் – பட்டய கிளப்பும் தகவல்.!

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டு பேசிய போது ஆனந்த் வெளிநாட்டுல நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்தான்.

அவன் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு இந்தியா வருவதாக கூறினார், ஆனால் நான் அதெல்லாம் தேவையில்லை. சினிமாவில் ஜெயிப்பது சாதாரண விசியம் அல்ல என கூறினேன்.

அதையெல்லாம் அவன் கேட்காமல் இந்தியா வந்து வாய்ப்பு தேடினான், இதனால் நான் அவனிடம் 1 வருடமாக பேசவில்லை.

தற்போது அவன் அவனுடைய சொந்த முயற்சியில் நல்ல படத்தில் அறிமுகமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.