டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை அக்டோபர் மாதம் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Local Election in Tamilnadu : தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்து இரண்டரை ஆண்டுகள் ஆனது.
இருப்பினும் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜே எஸ் சுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்டது.
பொண்ணு மாதிரி சொன்ன சேரனே இப்படி பண்ணலாமா? – வெளியானது ஷாக்கிங் ப்ரோமோ.!
அப்போது அக்டோபருக்குள் வார்டு மறுசீரமைப்புகளை முடித்துவிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
எனவே தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவாதத்தை ஏற்று தேர்தல் அறிவிப்பை அக்டோபரில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.