Web Ads

ஜெயிலர்-2 இன்று ஸ்டார்ட்: ரஜினிக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா?

ஜெயிலர்-2 பட ஷூட் இன்று தொடங்கியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.650 கோடி வரையில் வசூல் குவித்தது. இதனைத் தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாகி, டீசர் வெளியானது.

இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம், தங்களது எக்ஸ் பக்கத்தில், ‘முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம்; ஜெயிலர்-2 படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது’ என குறிப்பிட்டு ரஜினிகாந்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.

இன்று தொடங்கும் ஜெயிலர் 2 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெறுகிறது. இந்த 15 நாட்களும் ரஜினிக்கான காட்சிகள் படமாக்கப்படும். அதன் பிறகு மற்ற நடிகர், நடிகைகளின் காட்சிகள் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர் ரூ.650 கோடி வசூல் குவித்த நிலையில் ஜெயிலர் 2 ரூ.1000 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ரஜினிக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.!