40 வயதை கடந்து குழந்தை பெற்றுக் கொண்ட தமிழ் பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
பொதுவாக திரையுலகில் நடிகர் நடிகைகளாக வலம் வருபவர்கள் 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது கடந்த காலங்களில் அதிகமாகவே இருந்தது.
காரணம் அப்போதெல்லாம் ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டால் அவரது மார்க்கெட் முடிந்து விடும், அதன் காரணமாகவே பெரும்பாலான நடிகைகள் 40 வயதிற்கு பிறகு தான் திருமணம் செய்து கொண்டனர். தற்போது தான் இந்த நடைமுறை எல்லாம் மாறி திருமணத்திற்கு பின்னரும் நடிகைகள் நாயகியாக நடித்து வருகின்றனர்.
அப்படி 40 வயதை கடந்த பிறகு குழந்தை பெற்றுக் கொண்ட பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
- ராதிகா சரத்குமார் :
இவருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது, அப்போது சரத்குமாருக்கு 51 வயது, ராதிகாவிற்கு 42 வயது.
- ரேவதி :
நடிகை ரேவதி 47 வயதில் டெஸ்ட் ட்யூப் மூலமாக பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
- நீலிமா ராணி :
கணவருக்கும் இவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும் நிலையில் தனது 39 ஆவது வயதில் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
- சந்திரா லக்ஷ்மணன் :
காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது நாற்பதாவது வயதில் குழந்தையை பெற்றுக் கொண்டார்.
- பிரகாஷ் ராஜ் :
முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர் போனி வர்மா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து இவருக்கு 50 வயதாகும் நிலையில் ஆண் குழந்தைக்கு அப்பாவானார். இவரது முதல் மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரபுதேவா :
நடிகர், இயக்குனர், டான்சர் என பன்முக திறமைகளை கொண்ட பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் இவரது ஐம்பதாவது வயதில் பெண் குழந்தைக்கு அப்பாவானார்.
- நயன்தாரா :
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு 38 வயதாகும் நிலையில் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானார்.