சாக்ஷி அகர்வாலால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக மாறியுள்ளனர் மக்கள்.
Bigg Boss Sakshi Controversy : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சென்று கொண்டிருக்கிறது.
இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா, லாஸ்லியா, ஷெரின், கவின், முகேன், தர்ஷன், சாண்டி, சேரன் ஆகியோர் உள்ளனர்.
இந்த வார பிக் பாஸில் வெளியேறப்போவது இவர் தான் – அதிர்ச்சியை ஏற்படுத்திய ஓட்டெடுப்பு நிலவரம்.!
மேலும் சாக்ஷி அகர்வால், அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் விருந்தினராக உள்ளே சென்றுள்ளனர்.
நேற்றைய எபிசோடில் சாக்ஷி அகர்வால் மக்களையும் மக்களின் ஓட்டுகளை நாய் குறைப்பது போல என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பலரும் சாக்ஷிக்கும் கமல்ஹாசனுக்கும் எதிராக கருத்துகளை கூறி வருகின்றனர். இந்த முறையும் கமல்ஹாசன் எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை என்றால் நீங்கள் அரசியலில் மட்டும் மக்கள் என்ன செய்து விட போகிறீர்கள்? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.