கண்ணம்மா முன்னாடி அசிங்கப்பட்டுள்ளார் வெண்பா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் சௌந்தர்யா பாரதிக்கு போன் போட்டு சீக்கிரம் எதற்கு ஆஸ்பிட்டலுக்கு கிளம்பிப் போய்ட்ட? எதுக்கு தேவையில்லாம என்னிடம் சத்தம் போட்டேன் என கேட்கிறார். பாரதி ஹே மனிதன் கேள்வி மேல் கேள்வி கேட்பதாகவும் அவளை தூண்டிவிட்டது உங்க மருமக தான் பாரதி சத்தம் போடுகிறார்.
பிறகு சவுந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் போட்டு நடந்ததை கேட்க அவர் ஹேமா பாரதி வக்கீலிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு விட்டதைப் பற்றி கூறுகிறார். பிறகு ஹேமா சௌந்தர்யாவிடம் அந்த விவாகரத்து விஷயம் குறித்து கேட்க அதற்கு என்னிடம் பதில் இல்லை உன் அப்பாவிடம் தான் கேட்க வேண்டும் அவன் பதில் சொல்லாமல் விட்டாலும் திரும்பத் திரும்ப கேளு என தூண்டி விடுகிறார்.
இந்தப் பக்கம் வெண்பா ரோஹித் உடன் வெளியில் சென்று கொண்டிருக்க அப்போது வழியில் ஒருவர் விபத்தில் சிக்கி இருக்க அவரை வெண்பாவின் காரில் தூக்கி போட்டுகொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்கள். விக்ரம் மருத்துவமனைக்குச் செல்ல அங்கு கண்ணம்மா ரோஹித் பேசுகிறார். அப்போது ரோஹித் உங்களுக்கு நாங்க கடமைப்பட்டு இருக்கும் என சொல்ல இன்னொருவர் யார் என கண்ணாமா யோசிக்க அப்போது காரில் இருந்த வெண்பாவை அழைத்துக்கொண்டுபோய் வலுக்கட்டாயமாக அங்கே நிறுத்துகிறார்.
மேலும் வெண்பா தன்னுடைய வருங்கால மனைவியிடம் சொல்ல கண்ணம்மா நக்கலாக சிரித்து வெண்பாவை வெறுப்பேற்றுகிறார். நீங்க ரெண்டு பேரும் புள்ள குட்டியோட ரொம்ப நல்லா இருக்கணும் என வாழ்த்துகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது. இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள இன்றைய எபிசோடை விஜய் டிவியில் அல்லது ஹாட்ஸ்டாரில் பாருங்கள்.