BaakiyaLakshmi Serial Today Episode Update
BaakiyaLakshmi Serial Today Episode Update

பாக்கியா வார்னிங் கொடுக்க, ராதிகா முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் ஈஸ்வரியை பாக்யா வற்புறுத்தி ரெஸ்டாரண்டுக்கு கூப்பிட ஈஸ்வரி வர மறுத்தும் உங்கள வரிங்களான்னு கேட்கல, வரணும்னு சொல்றேன் போய் ரெடி ஆயிட்டு வாங்க என்று வற்புறுத்தி கூப்பிட்டு சொல்கிறார்.

ரெஸ்டாரன்ட்க்கு ஈஸ்வரியுடன் வந்த பாக்யா செப்பை அறிமுகம் செய்து வைக்கிறார். பிறகு செல்வி வாங்கமா கிச்சன் குள்ள போலாம் என்று ஈஸ்வரியை கூட்டிச்செல்ல பாக்யா செப்பிடம் பக்ரித் ஆர்டர் குறித்து பேசுகிறார். இதோட ஆர்டர் கிளோஸ் பண்ணிக்கலாம் என்று சொல்ல இல்ல மேடம் இன்னும் நம்பர் இன்னைக்கு ஒரு நாளைக்கு வர ஆர்டர் எடுக்கலாம் நான் எல்லா ஆர்டரையும் நல்லா பண்ணுவேன் என்றெல்லாம் பேசி பாக்கியாவை சம்மதிக்க வைக்கிறார்.

ஈஸ்வரி டேபிளில் உட்கார்ந்து கொண்டிருக்க வேலை செய்யும் இருவர் ஈஸ்வரியை பார்த்து இவ்ளோ சீக்கிரம் வந்து இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்க அதனை ஈஸ்வரி பார்த்துவிட்டு அவர்களை கூப்பிடுகிறார். என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க என்று கேட்க அது ஒன்னும் இல்லம்மா என்று அவர்கள் சமாளிக்க என்ன பத்தி தானே பேசிகிட்டு இருந்தீங்க சொல்லுங்க என்று சொல்ல இல்லை ஐயா இருந்து ஒரு மாசம் தான் ஆகுது அதுக்குள்ள நீங்க வெளிய வந்து இருக்கீங்க ஒரு வருஷம் ஆவுது வீட்டுக்குள்ள இருக்கலாம்ல என்று சொல்ல பிறகு செல்வி அவர்களை திட்டுகிறார். உடனே பாக்யாவிடம் வந்த ஈஸ்வரி என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ பாக்யா என்று சொல்லுகிறார். என்னாச்சு அத்தை என்ன விஷயம் என்று கேட்க அவர் என்னை எதையும் கேட்காத நான் வெளிய வெயிட் பண்றேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப உடனே செல்வி வர நடந்து விஷயங்களை சொல்ல பாக்யா அவர்களை திட்டுகிறார்.

பிறகு இருவரும் வீட்டுக்கு கிளம்பி வர அங்கு இனியா நாளைக்கு டான்ஸ் காம்பெடிஷன் இருக்கு எனக்கு ரொம்ப பயமா இருக்கு இன்னும் நான் எந்த பிராக்டிஸ்சும் பண்ணல என்று பேச ஜெனி அவருக்கு பொறுமையா நிதானமா இரு என்று அட்வைஸ் கொடுக்கிறார். அந்த நேரம் பார்த்து ஈஸ்வரியும் பாக்யாவும் வர ஈஸ்வரி அதுக்கு தான் நான் எங்கேயும் வரமாட்டேன்னு சொன்ன, வீட்டுக்குள்ளே இருந்தா எனக்கு எதுவும் தெரியாது இப்ப வெளிய போனா எல்லாரும் ஒன்னு பேசுறாங்க ஏன்டா வெளிய போகணும்னு இருக்கு என்றெல்லாம் கேட்க நான் தான் திட்டிவிட்டேனே அத்தை என்று சொல்ல எல்லாரையும் திட்டனும் அப்போ எதுக்கு இனிமே அந்த ரூம்தா என் உலகம் என்றெல்லாம் பேசுகிறார். மேலும் புடவை கட்டிக்கிட்டு சினிமாக்கு போறீங்களா? காலேஜுக்கு போறீங்களா என்று எல்லாம் பேசுகின்றார்கள். இனி எனக்கு இந்த பொட்டு எல்லாம் வேணாம் இனி என்னை எங்கேயோ கூப்பிடாத என்று ரூமுக்குள் சென்று விடுகிறார். ஜெனி என்ன ஆச்சு ஆன்ட்டி என்ன விஷயம் என்று கேட்க ரெஸ்டாரன்ட்ல இருக்கிறவங்க மாமா இறந்து கொஞ்ச நாள்ல எதுக்கு வெளிய வரீங்கன்னு கேட்டு இருக்காங்க அதனால டென்ஷன் ஆயிட்டாங்க என்று சொல்ல அதற்கு ஜெனி ஆனா இவங்க தியேட்டர் காலேஜ் எல்லாம் சொல்றாங்களே என்று சொல்ல பாக்கியா யோசிக்கிறார் வேற யாராவது ஏதாவது சொல்லி இருப்பாங்களோ என்று யோசிக்க இனியா ராதிகாவின் அம்மா பேசிய விஷயங்களை பாக்கி அவரிடம் சொல்லுகிறார் இதனால் பாக்யா கடுப்பாகி ஜெனி நீ வீட்ட பாத்துக்கோ வந்துடறேன் என்று கிளம்புகிறார்.

பாக்கியா வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் தெருவில் நின்று மூன்று பேர் யார் வீட்டு கதையோ பேசிக்கொண்டிருக்க பாக்யா அதை பார்த்து இன்னும் கடுப்பாகி உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா இன்னொரு வாட்டி அத்தை பேச்சை எடுத்தீங்க உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை என வார்னிங் கொடுத்து அனுப்புகிறார். உடனே திரும்பி பார்க்க ராதிகா காரில் இருந்து இறங்க ஒரு நிமிஷம் என நிற்க வைக்கிறார்.

ராதிகாவை நிற்க வைத்து இதுக்கு மேல உங்க அம்மா அத்தையை பத்தி தப்பா பேசினா எல்லாம் நான் சும்மா இருக்க மாட்டேன் அவங்க எங்க போனா எங்க வந்தா உங்க அம்மாவுக்கு என்னங்க பிரச்சனை இன்னொரு வாட்டி எங்க அத்தை பேச்சுக்கு வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் தொலைத்திடுவேன் என்று திட்டிவிட்டு கிளம்புகிறார்.

வீட்டுக்கு வந்த ராதிகா அம்மாவிடம் கேட்டது என்ன? அதற்கு ராதிகாவின் அம்மா சொன்ன பதில் என்ன?ராதிகா என்ன முடிவெடுத்துள்ளார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.