வில்லத்தனமாக பேசிய கோபி, ராதிகா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

Web Ads

கோபி வில்லத்தனமாக பேச ராதிகா பதில் கொடுத்துள்ளார்.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பீச்சில் நால்வரும் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர். ஈஸ்வரி எதையோ யோசித்துக் கொண்டு சிரிக்க ஜெனி என்னவென்று கேட்கிறார் பிறகு சின்ன வயசுல கடலுக்கு போகன்னு ரொம்ப ஆசை ஆனா எங்க வீட்ல கூட்டிட்டு போக மாட்டாங்க இவரை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் இவரு உனக்கு ஏதாவது ஆசை இருக்கா கேட்டபோது கடலுக்கு போகணும்னு ஆசை இருக்கு என்று சொன்னவுடன் அவர் கூட்டிட்டு போனாரு.

இது மட்டும் கிடையாது என்னோட சின்ன சின்ன ஆசையா இருக்கட்டும் பெரிய ஆசையா இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் உடனே நிறைவேற்றிவிடுவார் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார் உடனே பாக்யா ஜெனி இடம் நீ செழியன கூட்டிட்டு வந்திருக்கியா என்று கேட்க அவன் ரொம்ப பிசியா இருப்பான் நான் தான் அடம் பிடித்து கூட்டிட்டு வருவேன் என்று சொல்லு பழைய நினைவுகளை பேசி கொள்கின்றனர். பிறகு பீச்சில் விளையாடலாம் வாங்க என்று கூப்பிட நீங்க முதல்ல ரெண்டு பேரும் விளையாடுங்க நாங்க வரோம் என்று அமிர்தாவையும் ஜெனியையும் அனுப்பி வைக்கிறார்கள் அவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்க பாக்கியாவிடம் ஈஸ்வரி உனக்கு இவ்வளவு பிரச்சனைக்கு நடுவுல இந்த ரிலீஃப் தேவைதான் பாக்யா என்று சொல்லுகிறார்.

நீங்களெல்லாம் வீட்டுக்குள்ளேயே இருந்தீங்க உங்களுக்கு நான் இது தேவை அத்தை என்று சொல்ல ஆனால் எனக்கு புள்ள சரியில்ல உனக்கு புருஷன் சரியில்ல ஆனால் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு விஷயத்துல ஒத்துப் போய் இருக்கு நான் நல்லா இருக்கணும்னு நீ நினைக்கிற மாதிரி நீ எந்த கஷ்டத்தில் இருக்கக் கூடாது என்று இரண்டு மருமகளும் நினைக்கிறாங்க என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கின்றனர். மருமகள் கிடைக்கிறது எல்லாம் ஒரு வரம் என்று பேசி எமோஷனலாக சரி வாங்க பீச்சில் விளையாடலாம் என்று அனைவரும் விளையாடுகின்றனர்.

மறுபக்கம் ரூமில் ப்ரோடுயூசர் இடம் கோபி பேசிக்கொண்டிருக்க ராதிகா கொஞ்ச நாளா யார்கிட்ட ரொம்ப பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க ஏழில் படம் பண்ண போற விஷயத்தையும் அவருடைய ப்ரொடியூசர் கிட்ட பேசும் விஷயத்தை சொல்ல,நம்ம படத்தோட பூஜைக்கு போக போறோம் என்று சொல்லுகிறார். நான் வரல உங்க வீட்டு ஆளுங்க எல்லாம் இருப்பாங்க என்று சொல்ல யார் என்று கேட்க பாக்யா என்று ராதிகா சொல்ல பாக்கிய அங்க வரமாட்டா அடிச்சு சொல்ற பாக்கி அங்க வரமாட்டா என்று சொல்லி கூப்பிடுகிறார் என் கோபி இப்படி மாறிட்டீங்க என்று சொல்ல நான் நல்லா தான் இருந்தேன் எல்லாம் ஒரு வில்லன் அளவுக்கு மாத்துனது என் குடும்பம் தான் என்று பேசுகிறார். அது மட்டுமில்லாமல் அந்த பாக்யாவை எழில் கிட்ட இருந்து பிரிச்சி பழிவாங்காம விடமாட்டேன் என்று வில்லத்தனமாக பேசுகிறார். எதுக்கு கோபி இப்படி பேசுறீங்க என்று கேட்க இந்த விஷயத்துல என்ன எதுவும் சொல்லாத என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு அனைவரும் ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்ப ஈஸ்வரி முன்னாடி உட்கார்ந்து கிட்டுமா ஜெனி என்று கேட்க உட்கார்ந்துகொங்க பாட்டி என்று சொல்லுகிறார் உடனே பாக்கியா நா கார் ஓட்டறேன் என்று சொல்ல அவரும் சரி என்று சொல்லி கிளம்புகின்றனர். கொஞ்ச நேரத்தில் ஜெனி ஐஸ்கிரீம் சாப்பிடனும் போல இருக்கு என்று சொல்ல அமிர்தாவும் சரியான சொல்லுகிறார் இப்பதான சாப்பிட்டோம் என்று சொல்ல பிரக்னண்டா இருக்குறவங்க கேட்டா வாங்கி கொடுக்காம இருக்க கூடாது என்று சொல்லி ஐஸ் கடையில் நிறுத்தி நால்வரும் ஐஸ் சாப்பிடுகின்றனர். பிறகு பாக்கியா ஜெனி மற்றும் அமிர்தாவிற்கு நன்றி சொல்லுகிறார் ரொம்ப நாளாச்சு சிரிச்சு பேசி இருக்கிறார் ரொம்ப நிம்மதியா இருந்தா என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

சோபாவில் கோபமாக அமர்ந்து கொண்டிருந்த இனியாவிடம் செய்து வந்து இன்னுமா கோவமா இருக்கீங்க என்று கேட்க என்ன விட்டுட்டு அவங்க எப்படி போகலாம் என்று கோபப்படுகிறார். நான் வெளியே உக்காந்துகிட்டு இருக்கேன் நீங்க பேசுங்க என்று செழியன் இடம் சொல்லிவிட்டு வர அவரும் சமாதானம் செய்ய முயற்சிக்க இனியா கோபமாகவே இருக்கிறார். உடனே மூவரும் சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டு வர இனி யார் டென்ஷன் ஆகிறார்.

குடும்பத்தினர் இனியாவை எப்படி சமாதானம் செய்கின்றனர்?அதற்கு இனியா என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update