Browsing tag

story

என்ன தவம் செய்தேனோ: எஸ்.ஜே.சூர்யா உருக்கம்..

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் எஸ்.ஜே. சூர்யா, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். வாலி, குஷி, நியூ, இசை என இயக்கிய அவர், பல ஆண்டுகளுக்கு பிறகு டைரக்சன் பக்கம் அவர் திரும்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான எஸ்.ஜே. சூர்யாவின் ‘கில்லர்’ படம் தொடர்பான அறிவிப்புக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள உருக்கமாக பதிவில், ‘கில்லர் படம் குறித்த அறிவிப்பு வெளியானதை […]

தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல: கே.பாக்யராஜ் தெளிவுரை..

‘திரைக்கதை மன்னர்’ கே.பாக்யராஜ் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. அரசகுமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கயிலன்’. அருள் அஜித் இயக்கியுள்ள இப்படத்தில் ஷிவா, ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கூறியதாவது: ‘கே.ராஜன் பேசும்போது தமிழில் பெயர் வைப்பதை பற்றி குறிப்பிட்டார். அதைக் கேட்டவுடன் என்னுடைய படங்களை பற்றி யோசித்தேன். அதில், ஒரு படத்திற்கு ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ‘ என்று பெயர் வைத்திருந்தேன். அதன் பிறகு […]

ஜெய் நடிக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் அப்டேட்ஸ்..

ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ளார். படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியாகி இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் பாபு விஜய் படம் குறித்து தெரிவிக்கையில், ‘இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சினை ஒன்றை மையமாக வைத்து, காதல் கலந்த த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. ஒருவன் வாழ்வில் […]

சூரி நடிக்கும் படங்களின் வெற்றிக்கு காரணம்: தயாரிப்பாளர் கே.ராஜன் விளக்கம்..

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவானவர் சூரி என்பது தெரிந்ததே. இந்நிலையில், ‘மாமன்’ படத்தை தொடர்ந்து, சூரியின் நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை, மண்டாடி ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தரும் என கருதப்படுகிறது. இந்நிலையில் சூரி குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் ‘கயிலன்’ பட விழாவில் தெரிவிக்கையில், ‘இப்போது வரும் இயக்குநர்களின் சிந்தனை நன்றாக இருக்கிறது. அதேசமயம் அதிக செலவை தயாரிப்பாளர்களுக்கு வைத்து விடுகிறார்கள். […]

வெங்கி அட்லுரி இயக்கும் ‘சூர்யா-46’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?

சூர்யா 46’ படத்தின் கதைக்களம் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவுற்றது. தற்போது சூர்யா – ஜோதிகா இருவரும் கிழக்கு ஆப்பிரிக்காவில் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் திரும்பியவுடன் மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனிடையே ‘சூர்யா 46’ படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவிக்கையில், ‘முதலில் ஒருவருடைய […]

நடிகர் நானியுடன் இயக்குனர் சௌரவ் கூட்டணி

கதைகள் ஆயிரம். அதற்கு பொருந்தும் நடிகர்கள் முக்கியம். அவ்வகையில், ஒரு நிகழ்வு காண்போம்.. ‘ஹாய் நானா’ கூட்டணியான நானி – இயக்குனர் செளரவ் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். செளரவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாகூர், ஜெயராம், நாசர் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஹாய் நானா’. 2023-ம் ஆண்டு டிசம்பரில் வெளியான இப்படம் கமர்ஷியலாக வெற்றியை கண்டது. மேலும், திரைக்கதை, பாடல்கள், நடிப்பு, இசை என அனைத்து விதத்திலும் கொண்டாடப்பட்டது. ‘ஹாய் நானா’ படத்துக்குப் பிறகு […]

வடசென்னை-2, வாடிவாசல், மற்றும் சிம்புவுடன் கூட்டணி: வெற்றிமாறன் அப்டேட்ஸ்

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்து வலம் வருபவர் இயக்குனர் வெற்றி மாறன். தற்போதைய அவரது பிஸியான சூழலில் தெரிவிக்கையில், ‘கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படம் பண்ணப்போறேன். அதை முடித்துக்கொண்டு வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஒரு படம் பண்ணனும். தனுஷ் தான் அப்படத்தின் ஹீரோ. எனவே தனுஷ் -வேல்ஸ் மற்றும் என்னுடைய காம்போவில் அடுத்ததாக ஒரு படம் உருவாகவுள்ளது. சிம்பு படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக தனுஷை வைத்து வடசென்னை 2 படத்தை இயக்குகிறேன்’ என்றார். […]

தேவயானியின் அப்பாவித்தனம் பிடித்திருந்தது: இயக்குனர் சாய் கணேஷ் சுவாரஸ்ய தகவல்

இயக்குனர் சாய் கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3 BHK படம் வரும் ஜூலை 4-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தெரிவிக்கையில், ‘இந்த படத்தில் தேவயானி மேடம் நடிக்க வைக்க காரணம். அம்மா கதாபாத்திரத்திற்கு யார் என யோசிக்கும்போது, எனக்கு உடனே தோன்றியது தேவயானி மேடம் மட்டும் தான். அதன் பின்னர் வேறு யாருமே எனக்கு தோன்றவில்லை. காரணம் தேவயானி மேடம் இடம் இருக்கும் […]

நடிகர் ஸ்ரீ எழுதிய ‘மே ஐ கம் இன்’ நாவல்: நெட்டிசன்ஸ் வாழ்த்து

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’, மிஷ்கின் இயக்கிய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. இவர், முன்பு இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என வித்தியாசமாக தோற்றத்துடன் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அவர் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது? என வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஸ்ரீ நடித்த படங்களுக்கு அவருக்கு சம்பளம் […]

ராஜமவுலி இயக்கும் படத்திற்காக, ரூ.50 கோடியில் வாரணாசி செட்

இந்திய அளவில் கவனம் ஈர்த்த ராஜமவுலியின் அடுத்த பட அப்டேட் பார்ப்போம்.. ‘ஆர்.ஆர்.ஆர்’ பட வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மாதவனும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கதைப்படி, இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் வாரணாசியில் நடப்பது போல அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் கூட்டம் அதிகமுள்ள அங்கு படமாக்கப்பட முடியாது என்பதால், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்க உள்ளனர். […]