Browsing tag

நீதிமன்றம்

‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க, ஐகோர்ட் உத்தரவு..

இசைஞானி இளையராஜாவின் திரைப்பாடல்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவை. எந்தக் காற்றிலும் கலைந்து போகாதவை என்பது தெரிந்ததே. அவ்வகையில், இளையராஜா தனது பாடல்களுக்கான காப்புரிமைக்காக வழக்கும் தொடர்ந்து வருகின்றார். இது தொடர்பான நிகழ்வு பார்ப்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் மாதீஸ்வரன் இயக்கிய ‘டியூட்’ திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த, ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘பணக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும்’ ஆகிய பாடல்களை […]

இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த கோர்ட் தடை..

யூ டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டம், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது எனவும், சமூக வலைதளங்களில் ஏற்கெனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் […]

நடிகை லட்சுமி மேனன் மீதான வழக்கு ரத்து..

கேரளாவை சேர்ந்த நடிகை லட்சுமி மேனன். தமிழில் கும்கி, வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், கொச்சி அருகே ஆலுவா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி எர்ணாகுளம் பானர்ஜி சாலையில் உள்ள மதுபாருக்கு லட்சுமி மேனன் தனது 4 நண்பர்களுடன் சென்றதாக தெரிகிறது. அங்கு, ஆலுவாவை சேர்ந்த ஐ.டி .ஊழியரான ஷா சலீம் என்பவர் நண்பர்களுடன் மது அருந்த வந்தார். அப்போது அவருக்கும், லட்சுமி மேனனுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஷா […]

‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்கள்: வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி..

பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான ‘டியூட்’ படத்​தில் இளையராஜா​வின் பாடல்​களை அனுமதியின்றி பயன்​படுத்​தி​யிருப்​பது தொடர்​பாக, தனி​யாக வழக்கு தொடரலாம் என இளை​ய​ராஜாவுக்கு உயர் நீதி​மன்​றம் அனு​ம​தி​ அளித்துள்​ளது. பதிப்​புரிமை பெற்ற தனது பாடல்​களைப் பயன்​படுத்தி தனிப்​பட்ட முறை​யில் அதிக வரு​வாய் ஈட்டி வரு​வ​தாகக் கூறி சோனி மியூசிக், எக்கோ ரெக்​கார்​டிங், அமெரிக்​கா​வில் உள்ள ஓரியண்​டல் ரெக்​கார்ட்ஸ் ஆகிய நிறு​வனங்​களுக்கு எதி​ராக இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கை ஏற்கனவே விசா​ரித்த உயர் […]

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு ‘கோச்சடையான்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான மீடியா குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு, சென்னையை சேர்ந்த விளம்பர நிறுவனம் ரூ.10 கோடியை கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த ரூ.10 கோடிக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை மீடியா குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக கூறியும், அதற்கு உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்த் மீதும் பெங்களூரு கோர்ட்டில் விளம்பர நிறுவனம் […]

எனது உரிமைகளை பாதுகாத்ததற்காக நீதித்துறைக்கு நன்றி: நடிகர் நாகார்ஜுனா..

அறிவியல் தொழில் நுட்பம் அதிநவீனமாய் வளர்ந்து வருகிறது. இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துபவரும். அருவருக்கத்தக்க வகையில் கையாள்பவரும் உண்டு. அவ்வகையில் இதோ ஒரு வழக்கு.. நாகார்ஜுனா அவரின் பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை அவரின் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அப்போது நாகார்ஜுனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நடிகரை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ பரப்பப்பட்டு பணமாக்கப்படுகிறது. ஏஐ மாடல்களைப் பயிற்றுவிக்கக் கூட நடிகர் நாகர்ஜுனாவின் […]

நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிரான வழக்கு: கோர்ட் தடை நீட்டிப்பு..

தமிழ் சினிமாவில் நான் அவனில்லை 2, துணை முதல்வர், சிநேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர், கேரள மாநில நடிகர் சங்கமான ‘அம்மா’வின் தலைவராக தற்போது உள்ளார். முன்னதாக மோகன்லால் இருந்தார். ஸ்வேதா மேனன், திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் பணத்துக்காக ஆபாசமாக நடித்ததாகவும் அக்காட்சிகளை சமூக ஊடகங்கள், ஆபாச தளங்களில் வெளியிட்டு வருமானம் ஈட்டியதாகவும் சமூக ஆர்வலர் மார்ட்டின் மெனச்சேரி என்பவர், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தார். […]

ஆபாசமாக சித்தரிப்பு: ஐஸ்வர்யாராயை தொடர்ந்து, அபிஷேக்பச்சனும் வழக்கு..

ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து, அபிஷேக் பச்சனும் தனது படங்கள் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது பெயர், படம் மற்றும் போலி வீடியோக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் அபிஷேக் பச்சன் வழக்கு தொடர்ந்துள்ளார். அபிஷேக் பச்சன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரவீன் ஆனந்த், அபிஷேக் பச்சனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏஐ மூலம் சிலர் உருவாக்கி வருவதாகவும், […]

நடிகர் சங்கத்தேர்தல் தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவு..

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் முடிவுகளின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி, […]

ஆபாசமாக சித்தரிப்பு: நடிகை ஐஸ்வர்யாராய் வழக்கு..

அறிவியல் வளர்ச்சி ஆக்கப்பூர்வமாகவும், நல்வழிப்படுத்தும் வகையிலும் அமைய வேண்டும். ஆனால், இன்றைய சூழலில் அது ஆபாசமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், இதோ ஓர் வழக்கு.. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதாகவும், அதை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவருடைய வழக்கறிஞர் சந்தீப் சேத்தி தாக்கல் செய்த வழக்கில், ‘மார்பிங் செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் […]