நித்திஷ் ஓவராக பேச, பாக்கியா வார்னிங் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா ஆகாஷ் உடன் பேசியதை நித்திஷ் பார்த்ததால் இனியாவை சந்தேகப்பட்டு கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இது மட்டுமில்லாமல் சுதாகர் மற்றும் சந்திரிகா என மூவருமே இனியாவிடம் முகம் கொடுத்து கூட பேசாமல் இருந்து வருகின்றனர்.
இதனால் மனம் வருத்தப்பட்ட இனியா கோபியிடம் நித்திஷ் வீட்டில் நடந்து கொள்ளும் விஷயத்தைப் பற்றி சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார்.இந்த நிலையில் இந்த விஷயத்தை பாக்யாவிடம் கோபி சொல்ல பாக்யா அதிர்ச்சி அடைகிறார்.
பாக்கியா கோபி இருவரும் சுதாகர் வீட்டுக்கு வர நித்தீஷ் மற்றும் சுதாகர் இருவரும் வரவேற்று உட்கார வைக்கின்றனர். ரெஸ்டாரன்ட் விஷயத்தில் சும்மா இருந்த மாதிரி என் பொண்ணுக்கு ஏதாவது என்னால சும்மா இருக்க முடியாது என்று பாக்யா சொல்ல அதற்கு நிதிஷ் உங்க ஹோட்டலுக்காவ டெய்லியும் எதுக்கு வரான்னு எனக்கு தெரியாதா என்று சொல்லி கோபப்பட, பாக்யா அவ எந்த தப்பும் பண்ண மாட்டா என்று சொல்லுகிறார்.
சும்மா கதை சொல்லாதீங்க அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு தான் இருக்காங்க என்று நித்திஷ் சொல்ல, இனிமே இனியாவை மரியாதை குறைவாக பேசினீங்க நடத்தினீங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் என வார்னிங் கொடுக்கிறார். பரபரப்பான திருப்பங்களுடன் என்ன நடக்கப்போகிறது என்று இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.