ADMK MLA’S Advisory Meeting :
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை தோற்கடிப்பது(!?) உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சத்தமில்லாமல் நடந்த ஆர்யா, சாயிஷா ரிசெப்ஷன்- கலந்து கொண்டது யாருனு பாருங்க.!
அதன்படி, இன்று (28.0619) காலை 11.30 மணிக்கு அதிமுக அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த கூட்டம் நடக்க இருக்கிறது. இது குறித்து அதிமுக சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “தமிழக சட்டசபையில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்க இருக்கிறது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு காரணமே மோடி தானாம்.!!
எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பகல் 11.30 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 1-ஆம் தேதி அன்று சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
இந்த தீர்மானத்தை திமுக தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொண்டு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.