விவகாரமான கேள்வி கேட்க ரசிகர்..சமந்தா சொன்ன நச் பதில்..!

ரசிகரின் விவகாரமான கேள்விக்கு சமந்தா நச்சு பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து பாணா காத்தாடி ,நீதானே என் பொன்வசந்தம், கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்க மகன், தெறி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இவரது நடிப்பில் சிடாடல் என்ற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா சிட்னி நகரில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்கா ஒன்றில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் இந்த புகைப்படங்களை எடுத்த நபர் யார் என்று கேள்வி கேட்டுள்ளார்.அதற்கு சமந்தா சிட்னி சுற்றுலா கைடான நவோமி என்பவர் என்று பதிலளித்துள்ளார்.
இவரின் இந்த பதில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
