இரண்டு நாட்டு பிரதமர்களுடன் செல்ஃபி எடுத்த புகைப்படங்களை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மாதவன். சாக்லேட் பாயாக ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பெற்றிருந்த இவர் கடந்த ஆண்டு ராக்கெட்ரி என்னும் திரைப்படத்தை இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்து பல விருதுகளை பெற்றிருந்தார். தற்போது நயன்தாரா, சித்தார்த் ஆகியோருடன் இணைந்து “டெஸ்ட்” என்னும் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் கடந்த 14ஆம் தேதி பிரான்சில் நடைபெற்ற இரவு உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் ஆகியோருடன் இணைந்து செல்ஃபி புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த நடிகர் மாதவன் இருநாட்டு பிரதமருக்கும் நன்றி தெரிவித்து அப்புகைப்படம் என்றென்றும் தனது மனதில் பதிந்திருக்கும் இனிமையான தருணம் எனக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் நீண்ட பதிவை பகிர்ந்திருக்கிறார். அப்புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.