மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணி இருக்காரு.. பைசன் படம் குறித்து பேசிய துருவ் விக்ரம்..!

பைசன் படம் குறித்து துருவ் விக்ரம் மனம் திறந்து பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக பலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படம் குறித்தும் கதையின் ஹீரோவான துருவ் விக்ரம் பேசியுள்ளார்.
அதாவது பைசன் படத்தில் நான் என்னுடைய 100% சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறேன் என்றும் என் முதல் படமாக தான் இந்த படத்தை நான் பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார் நான் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அந்த இரண்டு படங்களை பார்க்காமல் இருந்தாலும் பிரச்சனை இல்லை பைசன் படத்தை பாருங்கள் என்று கூறியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் ரொம்ப உழைத்து கஷ்டப்பட்டு ஒரு சம்பவம் பண்ணி இருக்காரு அது எல்லோருக்கும் போய் சேரனும் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.
