நிதிஷ் பற்றி தெரிந்த உண்மை, பேரதிர்ச்சியில் இனியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

நிதிஷ் பற்றிய உண்மை இனியாவுக்கு தெரிய வர அதிர்ச்சியாக இருந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா கவுன்சிலரின் மனைவியை சந்தித்து நலம் விசாரித்து விட்டு கிளம்ப மறுபக்கம் இனியா வேலை பார்த்துக் கொண்டிருக்க அவர்களது நண்பர்கள் வந்து காபி குடிக்க கூப்பிடுகின்றனர் வேண்டாம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நானே இவ்வளவு யோசிச்சோம் அந்த வேலையை செய்யவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு என்று பேசிக் கொண்டிருப்பார் உடனே வேறு ஒரு வேலை செய்யும் ஆள் போதைப்பழக்கம் இருக்கிறவங்க லிஸ்ட்ல இருந்து எடுத்து பார்த்தா ஒரு ஐடியா கிடைக்கும் என்று சொல்ல இனியாவும் அதுவும் நல்ல ஐடியா தான் என்று சொல்லுகிறார். உடனே பேச்சுவாக்கில் கூட வேலை செய்பவர்கள் ஏற்கனவே நடந்த விஷயத்தை அதாவது நித்திஷ் டிரக்ஸ் அடிக்ட் ஆகியிருப்பதை பற்றி பேசுகின்றனர்.
ஆனால் முதலில் பெயர் சொல்லாமல் பேச அந்தப் பையன் கூட ஒரு தொழிலதிபரோட பையனென்று சொல்லிவிட்டு பேர் கூட ஏதோ சுதாகர் என்று சொன்னவுடன் இனியா அதிர்ச்சி அடைகிறார் உடனே போட்டோவை காட்ட இன்னும் அதிர்ச்சியாகி பையன் பெயர் என்ன என்று கேட்க சதீஷோ நிதிஷோ என்று சொன்னவுடன் இனியா பேரதிர்ச்சி அடைகிறார். உடனே அவர்கள் சென்று விட இனியா கம்ப்யூட்டரில் அதற்கான டீடைல்ஸ் எடுத்துப் பார்க்க அனைத்தும் உண்மை என தெரிய வருகிறது. உடனே டென்ஷன் ஆகி ஆபீஸிலிருந்து வெளியில் வந்து எப்படி ஏமாற்றி கல்யாணம் பண்ணி இருக்காங்க என்று நினைத்து விட்டு முதலில் கோபிக்கு போன் போட பிறகு வேண்டாம் என நினைத்து பாக்யாவுக்கு போடுகிறார் ஆனால் யாருக்கும் போன் பண்ணாமல் இதைக் கேட்டா அவங்க தாங்க மாட்டாங்க என்று சொல்லி அமைதியாகி விடுகிறார்.
மறுபக்கால் ஈஸ்வரி ரெடி ஆகிவிட்டு யாருக்காவது பொறுப்பு இருக்கா கரெக்டான டைமுக்கு போகணும்னு நினைக்கிறாங்களா பாரு என்று சொல்லிவிட்டு செழியன் மற்றும் பாக்யாவை கூப்பிடு உடனே கோபியும் வருகிறார் எல்லாரும் ஒண்ணா போயிடலாம் என்று சொல்ல பாக்யா நாங்க போய் ஜெனியை கூட்டிட்டு வந்துட்டோம் நீங்க போங்க என்று சொல்லி கிளம்புகின்றனர். இனியா வீட்டுக்கு வர, இந்த விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என நினைக்கிறார் ஆனால் உள்ளே பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளும் சொந்தக்காரர்களும் வந்துவிட இனிய அமைதியாக நிற்க சுதாகர் வந்து எல்லாரும் வந்துட்டாங்க அம்மா நீ சீக்கிரம் போய் ரெடி ஆகிட்டு வா என்று சொல்லுகிறார் படிக்கட்டு வரை சென்ற இனிதா கேற்றலாமா என்று யோசிக்க வேணாம் எவ்வளவு பேர் இருக்காங்க என்று மனதில் நினைக்கிறார்
நம்மளோட வாழ்க்கையை பத்தி நினைக்காத உங்களுக்கு நம்ம எதுக்கு மரியாதையா இருக்காதுன்னு நினைக்கணும் என்று மீண்டும் கீழே இறங்க உடனே பாட்டி அம்மா எல்லாம் வருவாங்க இப்போதைக்கு எந்த பிரச்சனையும் வேணாம் என்று சொல்லி மேலே வர எதிரில் நிதிஷ் வருகிறார்.

