விளையாட்டு சுவாரசியமா இருந்ததா? இல்லையா? விஜய் சேதுபதியின் கேள்விக்கு திணறிய போட்டியாளர்கள்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்கு முன் வெளியான முதல் ப்ரோமோவின் விளையாட்டு ஒன்னு தான் ஆனா அதுல கட்டம் கட்றாங்களா?ஆக்ரோஷத்தை காட்றாங்களா? சுவாரசியத்தை கூட்டுறாங்களா? விளையாட்டு வச்சு தான் அவங்களோட யுத்தியை கண்டுபிடிக்க முடியும், அப்ப கவனிக்க வேண்டியது விளையாட்டை இல்ல அவங்களோட புத்தியை கவனிச்சிடலாமா.. என்று ட்விஸ்ட் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி உட்கார சாருடன் வருகிறார். ஆடியன்ஸ்க்கும் சேர் இருக்கு உள்ள இருக்குற ஹவுஸ் மேட்ஸ்க்கும் சேர் இருக்கு வீட்ல இருக்குறவங்களும் உட்கார்ந்து பார்ப்பார்கள். அப்போ எனக்கு மட்டும் எப்படி அவங்க ரொம்ப நேரம் பேசுறாங்க சோல்டர் எல்லாம் வலிக்குது என்று சொல்லுகிறார். நமக்கு தேவையான சிம்மாசனத்தை நம்ம தான் தேடிக்கணும் புரிஞ்சுதா மக்களே என்று சொல்லுகிறார்.
அதனைத் தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விளையாட்டு சுவாரசியமாக இருந்ததா இல்லையா என்று போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி கேட்க அவர்களின் பதில் எதுவும் அவருக்கு ஒத்துவரவில்லை உடனே நீங்க விளையாடினது போட்டி மாதிரி தெரியல பயமா இருந்தது என்று சொல்லுகிறார்.
View this post on Instagram