கைதி திரைப்படம் மூன்றாவது வாரத்திலும் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான கார்த்தியின் நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. இந்த படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க எஸ்.ஆர் பிரபு தயாரித்திருந்தார்.
கதாநாயகி இல்லை, பாடல் இல்லை என இதுவரை தமிழ் சினிமா பார்க்காத வடிவத்தில் இப்படத்தை கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம் தொடர்ந்து அதே ரேஞ்சிலேயே சென்று கொண்டிருக்கிறது.
இன்னும் சொல்ல போனால் கைதி ரிலீசான தியேட்டர் எண்ணிக்கையை விட தற்போது இன்னும் அதிகமாகி இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர் பிரபு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இப்படியொரு மாபெரும் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு அவர் நன்றியையும் கூறியுள்ளார்.
#Kaithi Started with 250 screens and continuing its 3rd week with 350! It keeps getting better!! ???? Again… Thank you so much for your wonderful support!! ????????
— S.R.Prabhu (@prabhu_sr) November 7, 2019