Ayutha Ezhuthu
ஆயுத எழுத்து சீரியலில் இருந்து ஹீரோ, ஹீரோயின் என இருவரும் வெளியேறி விட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களுக்கு பெயர் போன சேனல் என்றால் அது விஜய் டிவி தான். இந்த சேனலில் புதியதாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் ஆய்த எழுத்து.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ஹீரோவாக அம்ஜத் என்பவரும் ஹீரோயினியாக ஜீத்து என்பவரும் நடித்து வந்த நிலையில் இருவரும் இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கான காரணம் என்ன என்பதற்கு கேட்டதற்கு பேட்டி ஒன்றில் அம்ஜத், நான் வெப் சீரிஸ் தொடர்களிலும் படங்களிலும் நடிப்பதால் விலகி கொண்டேன் என கூறியுள்ளார்.

நடிகை ஜீத்துவிடம் கேட்டதற்கு எல்லாம் நன்மைக்கே.. என்ன நடந்தது என்பது போக போக உங்களுக்கே தெரியும். என கூறியுள்ளார். ஜீத்து இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.