கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் தற்போதைய உடல் நிலை என்ன என நேரில் சந்தித்து பேசியுள்ளார் பிக் பாஸ் பிரபலம்.

Yashika Anand in Health Status : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான இவர் அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக பங்கேற்றார்.

சில தினங்களுக்கு முன்னர் இவர் தன்னுடைய நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்றிருந்தபோது அங்கே அதிவேகமாக கார் மோதியதில் விபத்து ஏற்பட்டு யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளி செட்டி பவானி என்பவர் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

தமிழகத்தில், 5 மாவட்டங்களில் மழை.. வானிலை அறிவுறுத்தல்..

யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். யாஷிகா ஆனந்த் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவருடைய ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த்தை நேரில் சந்தித்த ஐஸ்வர்யா தத்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யாஷிகா நலமுடன் மன உறுதியுடன் உள்ளார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என கூறியுள்ளார்.

Thalapathy Vijay-க்கு Karnataka Fans கொடுத்த பரிசு – மகிழ்ச்சியில் விஜய்..! | Trending News | Tamil