snake

திருவாரூர் மாவட்டம் நீடமங்களம் எனும் பகுதியில் சாலை போடுவதற்காக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சீர் அமைப்பதற்காக சாலை தோண்டப்பட்டது. ஆனால், சாலை பணிகள் துவங்கவே இல்லை.

இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் மாலா என்கிற பெண்ணை பாம்பு கடித்தது. எனவே, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த சாலை வழியாக ஆம்புலன்ஸால் வரமுடியவில்லை. எனவே, 3 கிலோ மீட்டர் தூரம் மாலாவை தூக்கி சென்றுள்ளனர்.

ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். எனவே, அந்த பகுதியில் சாலை வசதி செய்து கொடுத்திருந்தால் மாலாவின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.