நீடித்து கொண்டே செல்லும் ஊரடங்கால் மணிமேகலை எப்போது தான் சென்னையில் காலெடுத்து வைக்க போறேனோ என பதிவிட்டுள்ளார்.
VJ Manimegalai Reaction to Lock Down Extension : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. கிராமம் ஒன்றிற்குச் சென்று உள்ள இவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளார்.
இன்றோடு ஊரடங்கும் முடிந்து விடும் சென்னை திரும்பி விடலாம் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலை தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் சோகம் அடைந்துள்ளார்.
இன்னும் 16 நாளா? எப்போதுதான் சென்னையில் கால் எடுத்து வைக்கப் போகிறோனோ என சோகத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் அது வரைக்கும் இந்த மாட்டோட தான் நேரத்தை செலவிடும் போல எனவும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.