தெருவை கூட்டும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீரியலின் பெரிய பலமாக விளங்கி வருகிறார் சதீஷ்.
பிடிக்காத முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபி படாத பாடு பட்டு வருகிறார். இந்த நிலையில் ஆபீஸ் எல்லாம் திவாலாகி ஒன்னும் இல்லாமல் தெருவை கூட்டும் நிலைமைக்கு வந்து விட்டதாக கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.. எல்லாரும் ஒரே ஒரு கல்யாணம் மட்டும் பண்ணுங்க, இரண்டெல்லாம் பண்ணா இதுதான் நிலைமை என்று அவர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். ஃபியூச்சரிலும் சீரியலில் கோபியின் நிலைமை இதுதான் என தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ