விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
விஜய் டிவியின் பிரபல சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பொன்னி சீரியலுக்காக தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே.
இந்த சீரியலில் பொன்னியும் அவரது அப்பாவும் வீட்டில் இருந்து வெளியேறி தன்மானத்திற்காக போராடிவரும் நிலையில் கதாநாயகனாக இருக்கும் சக்தி அவரை வீட்டுக்கு கொண்டு வருவேன் என்று சபதம் போட்டு பொன்னி இருக்கும் இடத்தில் வந்து வசித்து வருகிறார்.சக்தி பொன்னியின் மனதை எப்படி மாற்றப் போகிறார்?பொன்னி வீட்டுக்கு வர சம்மதிப்பாரா? என்ற பல திருப்பங்களுடன் இந்த சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஆனால் தற்போது இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாகவும் அதற்கு பதிலாக தென்றலே மெல்ல பேசு என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் பொன்னி சீரியல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யாருக்கெல்லாம் பொன்னி சீரியல் பிடிக்கும் யாரெல்லாம் மிஸ் பண்றீங்க கமெண்ட் பண்ணுங்க..
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
