கதிர் முல்லையை விட்டு கண்ணீருடன் தனம் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஏற்கனவே குடும்பம் ஒன்று துண்டுகளாக உடைந்துள்ள நிலையில் கதிர் மற்றும் மூர்த்தி மட்டும் ஒன்றாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வீட்டுக்கு வந்த முல்லையின் அம்மா இரண்டு கர்ப்பிணி பொண்ணுங்க ஒரே வீட்ல இருக்க கூடாது, முல்லைக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது நீ உங்க அம்மா வீட்டுக்கு போயிடு என தனத்திடம் சொல்ல தனம் கண்ணீருடன் இந்த விஷயத்தை மூர்த்தியிடம் சொல்லி மூட்டையை கட்டிக் கொண்டு தனது வீட்டிற்கு கிளம்புகிறார்.
இதைப் பார்த்த கதிர் எங்கே கிளம்புறீங்க என கேட்க கொஞ்ச நாளைக்கு எங்க அம்மா வீட்ல இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கிறதா சொல்ல அண்ணா எப்படி இதுக்கு ஒத்துக்குச்சி என கேட்கிறார். முல்லை எங்க அம்மா ஏதாவது சொன்னாங்களா என கேட்க தனம் இல்லை என சொல்ல என் மேல சத்தியமா நீங்க இங்கதான் இருக்கணும் என தனத்தை தடுத்து நிறுத்துகிறார்.
அதன் பிறகு முல்லை அம்மா வந்ததும் முதல்ல நீ கெளம்பு என சொல்ல அவர் தனத்திடம் இப்போ உனக்கு சந்தோஷமா என்னை கோபப்பட கதிர் எங்க அண்ணி கிட்ட எதுவும் பேசக்கூடாது அமைதியா கிளம்பிடுங்க என கோபப்படுகிறார்.