முட்டி மோதியும் பிரைம் டைம் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் ஏறாத நிலையில் விஜய் டிவி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் விறுவிறுப்பான கதை களத்துடன் தொடங்கும் பல சீரியல் போற போக்கில் போர் அடித்து விடுகின்றன. அதற்கு காரணம் கதையில் அழுத்தம் இல்லாமல் கண்ட மேனிக்கு நகர்த்திச் செல்வது தான்.
தற்போது ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மட்டுமே தொடர்ந்து விறுவிறுப்பாக பயணித்து ரேட்டிங்கிலும் முன்னேற்றத்தை கண்டு வருகிறது. பாக்கியலட்சுமி சீரியல் நாளுக்கு நாள் கதை இல்லாமல் போராக சென்று கொண்டிருக்கிறது.
அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலுக்கும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதே நிலைமை நீடித்தால் சீரியல்களின் ரேட்டிங் இன்னும் மோசமாகிவிடும். இதன் காரணமாக தற்போது மெகா சங்கமம் என்ற ஆயுதத்தை விஜய் டிவி கையில் எடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆமாம் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேர ஒளிபரப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.