மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக மாவீரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் அதிதி சங்கர் உட்பட பல முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் அரசியல்வாதிகளை பார்த்து பயப்படும் சிவகார்த்திகேயன் அடிக்கடி வானத்தை பார்க்க வானத்திலிருந்து ஒரு குரல் அவரிடம் பேசும்.
அந்தக் குரல் விஜய் சேதுபதி உடையது தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆமாம் விஜய் சேதுபதி தான் இந்த படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.