soori
நடிகர் சூரியை கதாநாயகனான நடிக்கவைப்பது ஏன் என இயக்குனர் வெற்றிமாறன் விளக்கமளித்துள்ளார்.

Vetrimaran explain why soori in his movie – பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு, தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

ரசிகரின் செல்போனை வாங்கி செல்பி எடுக்கும் தல அஜித் – வைரல் வீடியோ!

தனுஷ் நடிப்பில் இவர் இயக்கிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அடுத்து நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து அவர் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது திரையுலகினர் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில், இதுபற்றி பேட்டி கொடுத்த வெற்றிமாறன் ‘நா. முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை தொகுப்பில் இடம் பெற்ற ஒரு கவிதைதான் இப்படத்தின் அடிநாதம். இறந்து போன ஒரு தாத்தாவின் இறுதிச்சடங்கு பற்றிய கவிதை அது. நடிகர் சூரியிடன் ஒரு எளிமையும், அப்பாவித்தனமும் இருக்கிறது. எனவே, இந்த கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பார்’ என அவர் கூறியுள்ளார்.