மாநாடு படத்தை பார்த்து நடிகர் விஜய் ஆச்சரியப்பட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டியில் கூறியுள்ளார்.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் மும்பரமாக நடித்து வருகிறார்.

பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்திய பேட்டி ஒன்று தளபதி விஜய் குறித்து பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான தகவல் வைரலாகி வருகிறது.

அதாவது, விகடன் விருது நிகழ்ச்சியில் சிம்புவின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு பெற்றிருந்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய வெங்கட் பிரபு, மாநாடு திரைப்படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலரும் தன்னை பாராட்டினார்கள். அதேபோல் நடிகர் விஜய்யும் படத்தைப் பார்த்துவிட்டு தன்னை பாராட்டியதுடன், இந்த யோசனையை நீங்கள் எப்படி படமாக மாற்றினீர்கள் எனக் கூறி அவர் ஆச்சரியப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். அந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.