தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்குவிலும் தயாரிப்பாளருக்கு வாரிசு திரைப்படம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் வாரிசு.
ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஏற்று நடித்துள்ளனர்.
இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக விஜய் படங்கள் வெளியாகும் போது மற்ற படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவதுண்டு. இதனால் படத்தின் தயாரிப்பாளர் பொங்கலுக்கு ரெடி செய்து பெரிய அளவில் வசூலை பார்க்கலாம் என கணக்கு போட அதற்கு செக் வைக்கும் விதமாக அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.
இரண்டு படங்களும் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் இரண்டிற்கும் சரிசமமான அளவில் திரையரங்குகள் பிரித்து தரப்படும். இதனால் வாரிசு திரைப்படம் எதிர்பார்த்த வசூலில் இருந்து கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.
சரி தமிழில் தான் இப்படி எனப் பார்த்தால் தெலுகுவில் பொங்கலுக்கு பிரபாஸ் நடிப்பில் உருவாக்கியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் உட்பட 3 முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கும் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் உருவாகி உள்ளது. இதனால் தயாரிப்பாளர் தரப்பில் அதிர்ச்சியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.