என்னை உள்ளே அனுப்பி என் பெயரை கெடுத்துவிட்டீர்கள் என்பது போல் வனிதா விஜயகுமார் பிக்பாஸிடம் எகிறிய விவகாரம் பிக்பாஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vanitha vijayakumar angry with biggboss – பிக்பாஸ் வீட்டில் உண்மையாக இருக்க வேண்டும். நடிக்கக் கூடாது.நாம் நாமாக இருக்க வேண்டும்.
உண்மையாக விளையாட வேண்டும் என வனிதா தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசன், வனிதாவை டார்கெட் செய்து கேள்விகளால் மடக்கினார்.
அதன்பிக் பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமரா மூலம் பிக்பாஸிடம் பேசிய வனிதா ‘ வீட்டில் ஒரு மாதிரி பேசுகிறார்கள்.
கமல் சார் முன்பு ஒரு மாதிரி பேசுகிறார்கள். மக்கள் கை தட்டினால் அதற்கு ஏற்ற மாதிரி மாறி விடுகிறார்கள்.
கமல் சார் ஒன்று கூறினால் அடுத்த நாள் அதற்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள்.
இதுமாதிரியான போட்டியாளர்கள்தான் வேண்டுமெனில் என்னை ஏன் மீண்டும் கூட்டிட்டு வந்தீங்க.என்னை வச்சு காமெடி பண்றதுக்கா?’ என கோபமாக வனிதா பேசினார்.
தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்? பிக் பாஸின் முகத்திரையை கிழித்த மது.!