தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்? என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை மதுமிதா பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார்.
Madhumitha Latest Shocking Interview : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளியேற்றப்பட்டவர் மதுமிதா. இவர் தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டார்.
மேலும் இதற்கான காரணம் என்ன என்பது இதுவரை முழுமையாக சரியாக தெரியாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில் மதுமிதா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அது குறித்து பேசியுள்ளார்.
இவரா அமலாபால் திருமணம் செய்து கொள்ள போகும் நபர்? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!
நான் தமிழகம் பற்றி ஒரு வரியில் கவிதை சொன்னேன். அதனை ஒளிபரப்ப முடியாது என பிக் பாஸிடம் இருந்து கடிதம் வந்தது. இதனால் என்னை 8 பேர் சேர்ந்து கிண்டலடித்தனர். தரக்குறைவாக பேசினார்கள்.
இதனால் மனமுடைந்து போன நான் கையை அறுத்து கொண்டேன், அப்போது எல்லாரும் பார்த்து சிரித்து கொண்டு தான் இருந்தார்கள். சேரன் சாரும் கஸ்தூரியும் தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள் என கூறியுள்ளார்.
மேலும் இந்த கேலி கிண்டல்களை பற்றி கமல்ஹாசனும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை எனவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.