வனிதா இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
Vanitha Exit From BB House ? : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 16 போட்டியாளர்களின் ஒருவர் தான் வனிதா விஜயகுமார். இவர் மீது குழந்தை கடத்தல் வழக்கு தொடர்ந்திருந்தார் இவருடைய இரண்டாவது கணவர் ஆனந்த ராஜ்.
இந்த புகாரை விசாரிப்பதற்காக தெலுங்கானா போலீஸ் சென்னை போலீஸ் உதவியுடன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
நீ சிங்கம் மா.. ஜாங்கிரிக்கு குவியும் சப்போர்ட் – ரசிகர்கள் சொல்றத பாருங்க.!
இதனையடுத்து வனிதா விஜயகுமார் இது குறித்து மற்ற ஹவுஸ் மேட்ஸ்களிடம் பேசியது போல ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது.
போலீசார் வழக்கு முடியும் வரை குழந்தையை அவரது முன்னாள் கணவரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர், அல்லது நேரில் ஆஜராகி இது குறித்து விளக்குமாறு கூறியுள்ளனர்.
மேலும் இதற்கான இறுதி முடிவு இன்று தெரிய வரும் என்பதால் வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.