கரோனா வைரஸ் குறித்து வடிவேலு அடுத்த புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Vadivelu New Video about Corona : சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் பலிகடாவாகி உள்ளது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த வைரசுக்கு மருந்து மாத்திரை இல்லாததால் மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் கூறி வருகின்றது.
லலிதா ஜுவல்லரியில் ரூ.50 கோடி நகை கொள்ளை – கொள்ளையர்களின் புகைப்படம் இதோ!
ஆனால் பல இளைஞர்கள் இதனை மதிக்காமல் சாலைகளில் அங்குமிங்கும் திரிந்து வருவதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்துகின்றனர்.
இதுகுறித்து தற்போது வடிவேலு வெளியிட்ட புதிய வீடியோவில் பேசியுள்ளார். கடவுள் இறங்கிட்டான். எல்லாரையும் சோதிக்கிறான் இந்த சோதனையில் எல்லாரும் பாஸ் ஆகணும். போலீஸ்காரர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க.
அவர்கள் ஏன் அடிக்கிறார்கள்? உங்களின் நல்லதுக்காகத்தான். நீங்க நல்லாயிருக்கணும் தான் அவர்கள் உயிரை பணயம் வைத்து ரோட்டில் வேலை பார்த்து வருகிறார்கள்.
அதனால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டிலேயே இருங்கள் என வடிவேலு பேசியுள்ளார்.
https://twitter.com/VadiveluOffl/status/1254802312507224065?s=19