trichy
திருச்சியில் நகைக்கடையில் பல கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Theft in Trichy Lalitha jewellery shop cctv pic – திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகை கடை உள்ளது.

இன்று காலை அந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள் கடைக்கு வந்தபோது அதன் கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பல நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தர்ஷன் விசயத்தில் ஏமாற்று வேலை செய்த டிவி சேனல்..? ரசிகரின் டீவீட்டால் சர்ச்சை.!

கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ.50 கோடி மதிப்புள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

நள்ளிரவு ஒரு மணியளவில் முகத்தில் முகமூடி அணிந்து இரு கொள்ளையர்கள் உள்ளே வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும், மோப்பநாய் தங்களை கண்டறியக் கூடாது என்பதற்காக அங்கு மிளகாய் பொடியை அவர்கள் தூவி சென்றுள்ளனர்.

நகைக்கடையின் பின்புறம் உள்ள கல்லூரி மைதானத்தின் வழியாக அவர்கள் வந்து கடையின் சுவற்றை துளையிட்டு உள்ளே வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். விசாரணையையும் முடுக்கி விட்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.