சுந்தர்.சி-வடிவேலு கூட்டணியில் ‘கேங்கர்ஸ்’ படம் எப்படி?: வைரல் நிகழ்வு

வடிவேலு வெளிப்படையாக பேசிய நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்..

சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் உருவான ‘கேங்கர்ஸ்’ படம், இன்று வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. விளையாட்டு வாத்தியார்களாக இருவரும் காமெடியில் அசத்தியுள்ளனர். குறிப்பாக, முதல் பாதியை விட, இரண்டாம் பாதி நகைச்சுவை சரவெடியில் திரையரங்கம் அதிர்கிறது. அவ்வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு திருப்தி என சொல்லலாம்.

14 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் சுந்தர்.சி- வடிவேலு காம்போ கலக்கியுள்ளனர். வின்னர், கிரி, ரெண்டு, லண்டன் என இவர்களது கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் வெற்றியே.
அதே தரத்தில் ‘கேங்கர்ஸ்’ படமும் இணைந்துள்ளது.

முன்னதாக, இப்படத்தின் பிரஸ் ஷோ போடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர்.சி இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் என்றனர்.

இந்நிலையில், வடிவேலு தெரிவிக்கையில், ‘ஒரு சில படங்களில் இயக்குனர் சொல்லும் காட்சிகளுடன் நாம் சில இன்புட்ஸ் கொடுப்போம். அதை சிலர் ஏற்றுக் கொள்வார்கள். சில இயக்குனர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவர்களிடம் நான் சொல்லி பாப்பேன். ஆனால், அந்த இயக்குனர்கள் கடைசிவரை அவர்கள் சொன்ன காட்சியை தான் படமாக எடுப்பார்கள். அதை ஒரு சிலர் கேள்விப்பட்டு, இயக்குனருடன் நான் வாக்குவாதம் செய்ததாக கிளப்பி விடுகின்றனர். வடிவேலுவின் திமிர் பேச்சு என்றெல்லாம் ஹெட் லைன்ஸ் போடுகின்றனர். இப்படி தான் எனக்கு கெட்ட பெயர் வருது. கடைசியில மொத்த பழியும் என்மேல தான் விழும்’ என்றார் புன்னகையுடன் வடிவேலு.

vadivelu about false news in gangers movie promotion event