ஜீ தமிழின் அனைத்து சீரியல்களிலும் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் ஜீ தமிழின் மொத்த சீரியல்களும் அதிரடி மாற்றங்களும் புத்துணர்ச்சி பெற உள்ளன. அப்படி என்னென்ன மாற்றங்கள் நடக்க உள்ளன. என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இந்திரா :
கெளதம், இந்திரா இடையே ஏற்படும் பிரச்சனையால் இருவரும் பிரிந்து விட இந்திராவை சமாதானம் செய்ய மாறுவேடத்தில் வருகிறான் கெளதம். கெளதமின் இந்த முயற்சி வெற்றியை கொடுக்குமா? இந்திரா மீண்டும் இணைவாளா என்பது தான் அந்த மாற்றம்.
கனா :
அட அன்பரசியின் அப்பா சந்திரசேகர்னு எப்ப தான்டா தெரியும் என கேட்கும் அளவிற்கு தொடர்ந்து சஸ்பென்ஸ் கொடுத்து வந்த நிலையில் தற்போது அந்த ரகசியம் மொத்தமாக உடைய விஷ்வா அனன்யா கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்பது தான் ஹைலைட் திருப்பு முனை
இதயம் :
ஆதியின் காதலை பாரதி ஏற்க மறுக்க தமிழ் என்னை அப்பாவாக ஏத்துக்கிட்டா நீங்க என் காதலை ஏற்று கொள்வீர்களா? என ஆதி கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தமிழ் ஆதியை அப்பா என அழைக்க பாரதி எடுக்க போகும் முடிவு என்ன? என்ற எதிர்பாராத ட்விஸ்ட்டுகளுடன் சீரியல் மேலும் விறுவிறுப்படைய உள்ளது.
சண்டக்கோழி :
நந்தினியின் சூழ்ச்சிகள் அனைத்தும் விக்ரமுக்கும் மகாவுக்கும் தெரிய வர இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர முடிவெடுக்கும் போது விபத்து ஒன்று இவர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட உள்ளது. இதனால் அடுத்து நடக்க போவது என்ன என்ற கதைக்களத்துடனும் புதிய கதாபாத்திரங்களுடன் சீரியல் சூடு பிடிக்க உள்ளது.
சீதா ராமன் :
சீதா ராமன் சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக மகாவை சுட்டு தள்ளுகின்றனர், அந்த பழி சீதாவின் மீது விழ ராமே தனது மனைவியை கைது செய்ய போகிறான். உண்மையில் மகாவை கொன்றது யார்? சீதா வெளியே வர போவது எப்படி? அடுத்து ராம், சீதா வாழ்க்கையில் என்ன நடக்கும் என்ற அதிரடி திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
நளதமயந்தி :
நளனின் நாடகம் அனைத்தும் தமயந்திக்கு தெரிய வருகிறது, தமயந்தியின் கல்யாணம் நடக்குமா? அல்லது நலன் மாப்பிள்ளையாவானா? என்ற திருப்பங்களுடன் சீரியல் கதைக்களம் மாற்றத்தை சந்திக்க உள்ளது.
சந்தியா ராகம் :
முதல் முறையாக மாயாவுக்கு ஆதரவாக பேசும் ரகுராம், மாயாவிடம் ஏற்பட போகும் மாற்றங்களுடன் சீரியல் கதைக்களம் செல்லும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
மாரி :
பார்வதியின் மகள் துர்கா தான் இந்த மாரி என்ற உண்மை தாராவுக்கு தெரிய வருகிறது. இந்த விஷயம் மொத்த குடும்பத்துக்கும் தெரிய வருமா? தாராவின் அடுத்தகட்ட திட்டம் என்ன என்ற அதிரடி கதைக்களத்துடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
அண்ணா :
பாண்டியம்மாவின் என்ட்ரி, சண்முகத்தை விட்டு பிரிய போகும் பரணி.. முத்துபாண்டியின் கல்யாணம் என கதைக்களம் மேலும் விறுவிறுப்படைய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கார்த்திகை தீபம் :
இத்தனை நாளா பொத்தி பொத்தி வைத்திருந்த பல்லவி குறித்த ரகசியம் கார்த்திக்கு மொத்தமாக தெரிய வர அவன் தீபாவை ஏற்பானா? வெறுப்பானா? என அதிரடி திருப்பங்களுடன் சீரியல் கதைக்களம் நகர உள்ளது.
மீனாட்சி பொண்ணுங்க :
பூஜா செய்த கொலையால் ஜெயிலுக்கு போன ஷக்தி, பழியை ஏற்று சக்தியை காப்பாற்றிய வெற்றி, ரங்கநாயகிக்கு பூஜாவில் வில்லத்தனங்கள் தெரிய வருமா? என்ற மாற்றங்களுடன் சீரியல் நகர இருப்பதாக தெரிய வந்துள்ளது.
நினைத்தாலே இனிக்கும் :
பொம்மி குழந்தையாக வந்து சித்தார்த்தை காப்பாற்றி வீட்டுக்குள் நுழைந்துள்ள நிலையில் அந்த குழந்தை பொம்மி தான் என்று அறியும் உச்சகட்ட திருப்பங்களுடன் சீரியல் கதை நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வித்யா நம்பர் 1 :
நிலா பாப்பா தன்னுடைய மகள் தான் என்ற உண்மைகள் சஞ்சய்க்கு தெரிய வர வித்யா சஞ்சய் மீண்டும் ஒன்றிணைவார்களா? என்ற மாற்றங்களுடன் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இப்படி ஜீ தமிழின் அனைத்து சீரியல்களும் அதிரடி மாற்றங்களுடன் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. புதிய பொலிவுடன் புத்துணர்ச்சி பெறும் உங்க பேவரைட் சீரியல்களை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.