வடிவேலு மாமா எங்களை ஏமாற்றி விட்டார்.. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஓபன் டாக்..!

வடிவேலு குறித்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பேசியுள்ளார்.

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் இவரது நடிப்பில் படைத்தலைவன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு குறித்து சண்முக பாண்டியன் பேசியிருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது எங்கள் சொந்த மாமாவை எப்படி பார்த்தோமோ அதே மாதிரி தான் வடிவேலு மாமாவையும் சின்ன வயதில் பார்த்தோம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டு போய்விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் அந்த சின்ன வயதிலேயே நாங்கள் துரோகத்தை பார்த்து விட்டோம் அதனால் இப்போது யார் என்ன செய்தாலும் கவலை இல்லை எனக் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
