நடிகர் வடிவேலுவை நேரில் சந்தித்து மாமன்னன் படகுழுவினர் மாலை அணிவித்து கௌரவப்படுத்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல விநியோகிஸ்தர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வளம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். முன்னணி நடிகராகவும் கலக்கி வரும் இவர் தற்போது அரசியலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அதனால் படங்களில் நடிப்பதை தவிர்க்க இருக்கும் இவர் தனது கடைசி படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

பகத் பாஸில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மதியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்த நிலையில் உதயநிதி அவர்கள் படக்குழுவினருடன் மாமன்னன் திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வரவேற்பை பெற்று வரும் நடிகர் வடிவேலுவை அவரது இல்லத்தில் சந்தித்து மாலை அணிவித்து கௌரவ படுத்தியுள்ளார். மேலும் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர், “தன் எதார்த்த மற்றும் தேர்ந்த நடிப்பால் மாமன்னன் திரைப்படத்தை மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய அண்ணன் வடிவேலு அவர்களை நேரில் சந்தித்து அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்”. என்று குறிப்பிட்டு வீடியோவுடன் பதிவிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.