சூட்டிங் போன வேகத்தில் மூன்றே நாளில் சென்னை திரும்பி உள்ளார் நடிகை திரிஷா.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், தாமஸ் மாதீவ், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் படப்பிடிப்புகள் காஷ்மீரில் தொடங்கிய நிலையில் திரிஷா உட்பட அனைவரும் தனி விமானம் மூலம் காஷ்மீர் பறந்தனர். ஆனால் ஷூட்டிங் சென்ற வேகத்தில் மூன்றே நாளில் சென்னை திரும்பி உள்ளார் நடிகை திரிஷா.

லோகேஷ் கனகராஜ் படங்களில் நாயகிக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது, மேலும் அவருடைய படங்களில் நாயகி கொல்லப்பட்டு விடுவார் என்பதால் இந்த படத்தில் நாயகியாக நடிக்கும் திரிஷாவின் கதாபாத்திரத்தை அதற்குள் கொன்று விட்டார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால் திரிஷா அதற்குள் ஏன் ஷூட்டிங் முடித்துவிட்டு திரும்பி வந்தார் என்ற சந்தேகம் ரசிகர்களுக்குள் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.