தெறி படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு.. என்ன காரணம் தெரியுமா? தயாரிப்பாளர் கொடுத்த தகவல்.!!
தெறி படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக திரைப்படத்தை வெளியிட்டு தேதி ஒப்பிடாமல் தயாரிப்பு நிறுவனம் ஒத்தி வைத்துள்ளது.
ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீட்டையும் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.
ஏனென்றால் திரௌபதி 2 மற்றும் ஹாட்ஸ்பாட் 2 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று வளரும் இயக்குனர்கள் மற்றும் புதிய தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
