தஞ்சை பெரிய கோவில் பற்றி ஜோதிகா பேசிய பேச்சை அடுத்து கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
Thanjavur Collection Visit to GH : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஜோதிகா தற்போது தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கி நடித்து வருகிறார்.
இவர் ரா சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள புதிய படத்திற்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அப்பொழுது மருத்துவமனை மிகவும் அசுத்தமாக பராமரிப்பு இல்லாமல் இருந்ததாக விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
கோவில்கள் எதற்கு எனக் கூறினாரா? உண்மையில் ஜோதிகா பேசியது என்ன? – வீடியோவுடன் இதோ.!
வெளியீட்டு விழாவில் தஞ்சை பெரியகோவில் பராமரிப்புக்கு செலவு செய்வது போலவே மருத்துவமனைக்கும் பள்ளிகளுக்கும் செலவு செய்து அதனையும் பராமரியுங்கள் எனக் கூறினார்.
இவர் கூறிய பேச்சு வேறுவதமாக திரிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்துள்ளார்.
ஜோதிகா கூறியதுபோல மருத்துவமனை பராமரிப்பில்லாமல் இல்லாமல் ஏதாவது குறை இருந்தால் அதனை சரி செய்வதாக கூறியுள்ளார்.
• Tanjore Collector Inspects Government Hospital Post #Jyothika Speech At Recent Award Function Where She Disclosed The Environment Is Not Hygienic | @Suriya_Offl pic.twitter.com/J9qiuLIjOu
— Suriya Fans Team ™ (@SuriyaFansTeam) April 24, 2020