ஜோதிகா விருது விழா ஒன்றில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்நிலையில் இந்த வீடியோ தற்போது உருவாகியிருக்கிறது.
Jyothika Speech About Temples : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து சூர்யாவை மணந்து கொண்டவர் ஜோதிகா.
திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு ஜோதிகா தற்போது புதிய அடுத்த இன்னிங்சை தொடங்கி சிறந்த படங்களாக நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட போதே கோயில் உண்டியல்களில் காசு போடுவது போல பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அளித்து அதனை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லுங்கள் என கூறினார்.
ஆனால் ஜோதிகா கோயில்கள் எதற்கு? பள்ளிகள் மருத்துவமனைகளுக்கு செலவு செய்யுங்கள் என கூறியது போல சமூக வலைதளங்களில் திரித்துப் பேச ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் ஜோதிகா பேசிய விஷயங்கள் இது தான்.. நீங்களே கேளுங்க
செம்ம 😍😍😍
https://t.co/KsPmijFPrl— சாமானியனின் சவுக்கு© (@Samaniyantweet) April 22, 2020