நடிகர் சூர்யாவின் பெரியப்பாவை அரிவாளால் வெட்டி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Suriya Relative Admitted in Hospital : கோவையில் உள்ள சூலூர் நடராஜ புரத்தைச் சார்ந்த 61 வயதான குமாரசாமி மற்றும் அவருடைய மகன் அகிலேஷ் உறவினர் வீட்டுக்கு காரில் சென்று உள்ளனர்.
பயணத்தின் போது திடீரென எதிரில் வந்த பைக் மீது கார் மோதியது. இது தொடர்பாக அகிலேஷ் மற்றும் பைக்கில் நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
திடீரென இந்த தகராறு கைகலப்பாக மாற பைக்கில் வந்தவர் அருகிலிருந்த வீட்டிலிருந்து அருவாளை எடுத்து இதுவரையும் தாக்கியுள்ளார்.
அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த குமாரசாமி மற்றும் அவருடைய மகன் அகிலேஷ் ஆகியோரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த குமாரசாமி நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்கு பெரியப்பா முறை ஆவார். அதாவது நடிகர் சிவகுமாரின் பெரியம்மாவின் மகன் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.